குமாரபாளையம் மலுக்கு அச்சு தொழிலாளர் சங்க மகா சபை கூட்டம்
குமாரபாளையம் மலுக்கு அச்சு தொழிலாளர் சங்க மகா சபை கூட்டம் நடைபெற்றது.;
குமாரபாளையத்தில் வ.உ.சிதம்பரனார் மலுக்கு அச்சு தொழிலாளர் சங்க மகா சபை கூட்டம் சங்க தலைவர் லோகநாதன் தலைமையில் நடைபெற்றது.
குமாரபாளையத்தில் வ.உ.சிதம்பரனார் மலுக்கு அச்சு தொழிலாளர் சங்க மகா சபை கூட்டம் சங்க தலைவர் லோகநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
புதிய தலைவராக லோகநாதன், செயலராக வெங்கடாசலம், பொருளராக குமார் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் 4 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அகில இந்திய வேலை நிறுத்த போராட்டத்தை வெற்றி பெற செய்வது, மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான பேர் பங்கேற்பது, நல வாரியத்தில் மேலும் பல தொழிலாளர்கள் இணைப்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
எச்.எம்.எஸ். சங்க மாநில உதவி தலைவர் செல்வராஜ், பென்சன் சங்க மாநில குழு உறுப்பினர் சண்முகம் உள்பட பலர் பங்கேற்றனர்.