புகையிலை பொருட்கள் பறிமுதல் உள்ளிட்ட குமாரபாளையம் கிரைம் செய்திகள்

புகையிலை பொருட்கள் பறிமுதல் உள்ளிட்ட குமாரபாளையம் கிரைம் செய்திகள் இங்கு பதிவிடப்பட்டுள்ளது.

Update: 2024-07-04 12:46 GMT

குமாரபாளையத்தில் புகையிலைப் பொருட்கள் விற்ற நபர் கைது செய்யப்பட்டார்.

குமாரபாளையம் அருகே அம்மன் நகர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், எஸ்.ஐ. தங்கவடிவேல் உள்பட போலீசார் பலர் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள ஒரு மளிகை கடையில் புகையிலைப் பொருட்கள் விற்பது கண்டுபிடிக்கப்பட்டது. புகையிலை பொருட்களை விற்பனை செய்த பழனிச்சாமி (வயது54,) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்த புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

குமாரபாளையத்தில் அனுமதியில்லாமல் அரசு மது பானங்கள் விற்ற மூவர் கைது செய்யப்பட்டனர்.

குமாரபாளையத்தில் அனுமதியில்லாமல் அரசு மது பானங்கள் அதிக விலைக்கு விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். பள்ளிபாளையம் சாலை கவுரி மெஸ் அருகில், கோட்டைமேடு, ராஜம் தியேட்டர் அருகே ஆகிய இடங்களில் மது பானங்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக அறிந்து, நேரில் சென்ற போலீசார் அங்கு மது விற்றுக்கொண்டிருந்த ராஜா, 52, முருகன், 40, சேகர், 32, ஆகிய மூவரை கைது செய்து, அவர்களிடமிருந்து 160 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மது விற்ற செல்வகுமார், ஜான் பீட்டர் தலைமறைவாகினர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார் மேலும் யார் யாருக்கு தொடர்பு உள்ளது? என விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News