குமாரபாளையம் அபெக்ஸ் சங்கத்தினரின் கலிக்கம் கண் சிகிச்சை முகாம்

Kalikam-குமாரபாளையம் அபெக்ஸ் சங்கம் சார்பில் கலிக்கம் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

Update: 2022-02-12 12:00 GMT

குமாரபாளையம் அபெக்ஸ் சங்கம் சார்பில் நடைபெற்ற கலிக்கம் கண் சிகிச்சை முகாம்.

Kalikam-குமாரபாளையம் அபெக்ஸ் சங்கம் சார்பில் மாதத்தின் 2ம் சனிக்கிழமையன்று கலிக்கம் கண் சிகிச்சை முகாம் நடைபெற்று வருகிறது. நேற்று தலைவர் பிரகாஷ் தலைமையில் முகாம் நடைபெற்றது.

இதுகுறித்து சித்தா டாக்டர் கார்த்தி கூறுகையில், உடம்பில் உள்ள நோய்களை மூலிகை சாற்றினை கண்கள் வழியாக ஊற்றி குணமாக்கும் சிகிச்சை கலிக்கம் சிகிச்சை எனப்படும். இதனால் கிட்டப் பார்வை, தூரப்பார்வை, கண்களில் நீர் வடிதல், புரை வளர்தல் சரி செய்தல், தலைவலி, வயிறு, பெண்களின் கர்ப்பபை பாதிப்புகள், தோல் வியாதி, நரம்பு பலகீனம், வயது முதிர்வின் நடுக்கம் சம்பந்தமான நோய்கள் சரி செய்யப்படும்.

மருந்து விடப்படும் நாளில் அசைவம் சாப்பிடக் கூடாது. ஐ.ஒ.எல் லென்ஸ் வைத்திருக்கும் நபர்களும் இந்த மருந்தை விட்டுக்கொள்ளலாம். மருந்தை விட்டுக்கொள்வதில் கால நிர்ணயம் இல்லை என அவர் கூறினார்.

இதுகுறித்து தலைவர் பிரகாஷ் கூறுகையில், திண்டுக்கல்லில் இருந்து சித்தா டாக்டர் கார்த்தி நேரில் வந்து கலிக்கம் முகாமினை நடத்தி வருகிறார். இந்த முகாம் தொடங்கிய போது குறைவான பொதுமக்கள் பங்கேற்றனர். இந்த மருந்தின் செயல்பாடுகள் அறிந்து பலருக்கும் பயனாளிகள் கூறியதால், தற்போது பொதுமக்கள் ஏராளமானோர் வந்து கண்களில் மருந்து விட்டுக்கொள்கிறார்கள் என அவர் தெரிவித்தார்.

சங்க செயலர் கார்த்தி சபரி, பொருளர் சண்முகம் உள்பட பலர் பங்கேற்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News