குமாரபாளையத்தில் தேசிய கொடியுடன் வலம் வந்த கராத்தே மாணவர்கள்

குமாரபாளையத்தில் தேசியக் கொடியுடன் கராத்தே மாணவர்கள் வலம் வந்தனர்.

Update: 2022-08-14 13:45 GMT

குமாரபாளையத்தில் தேசியக் கொடியுடன் இந்தியன் கராத்தே பயிற்சி மைய மாணவர்கள் வலம் வந்தனர்.

75வது சுதந்திரதின விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குமாரபாளையம் இந்தியன் கராத்தே பயிற்சி மையம் சார்பில் தேசியக்கொடியுடன் ஊர்வலமாக சென்றனர். விடியல் ஆரம்பம் பிரகாஷ் ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.

நாராயண நகர் நகராட்சி பள்ளி வளாகத்தில் துவங்கிய பேரணி முக்கிய வீதிகளின் வழியாக வந்து மீண்டும் பள்ளியில் நிறைவு பெற்றது. கவுன்சிலர் அம்பிகா ராதாகிருஷ்ணன், டாக்டர் சண்முகசுந்தரம், சரவணன், மஞ்சுளா தேவி, சபர்ணா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News