2 முறை வாழ்த்திய கமல்: மநீம மகளிரணி நிர்வாகி மகிழ்ச்சி

குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் மகளிரணி நிர்வாகிக்கு கமல் 2 முறை வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.

Update: 2022-04-21 00:25 GMT

சித்ரா, குமாரபாளையம். 

குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் மகளிரணி நிர்வாகிக்கு கமல் 2 முறை வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.

குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் மகளிரணி செயலராக பணியாற்றி வருபவர் சித்ரா, 38. இவர் ஏப் 17ல் தனது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு கட்சியின் நிறுவனர் கமல் ஏப் 18ல் பிறந்த நாள் காணும், என்று வாழ்த்து செய்தி அனுப்பி இருந்தார். ஏப். 17 தான் தனது பிறந்த நாள் என மூத்த நிர்வாகிகளிடம் சித்ரா, கூற, மீண்டும் ஏப்.17 ல் பிறந்த நாள் கொண்டாடும் சித்ராவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் என வாழ்த்து செய்தி இரண்டாம் முறையும் வந்தது. இது குறித்து நிர்வாகி சித்ரா மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளார்.

Tags:    

Similar News