கணவர் மாயம் மனைவி புகார்
குமாரபாளையத்தில் கணவர் காணாமல் போனதாக மனைவி புகார் கொடுத்துள்ளார்.;

கணவர் மாயம்
மனைவி புகார்
குமாரபாளையத்தில் கணவர் காணாமல் போனதாக
மனைவி புகார் கொடுத்துள்ளார்.
குமாரபாளையம் நாராயண நகர் பகுதயில் வசிப்பவர் திவ்யா, 35. கார்மெண்ட்ஸ் கூலி. இவரது கணவர் கங்காதரன், 35. விசைத்தறி கூலி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். நேற்றுமுன்தினம் வேலைக்கு சென்ற கங்காதரன் இதுவரை வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், குமாரபாளையம் போலீசில் இவரது மனைவி திவ்யா புகார் கொடுத்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார்,. காணாமல் போன கங்காதரனை தேடி வருகின்றனர்.