குமாரபாளையத்தில் 2 மணி நேர கனமழை: பொதுமக்கள் மகிழ்ச்சி
குமாரபாளையத்தில் 2 மணி நேர கன மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.;
குமாரபாளையத்தில் பெய்த மழை.
குமாரபாளையத்தில் கடும் வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதனால் மக்கள் வெளியில் வரவே தயக்கம் காட்டும் நிலை இருந்து வருகிறது.
சாலையோர வியாபாரிகள், கட்டுமான தொழிலாளர்கள், வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள் என பலதரப்பட்ட மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் குளிர் காற்றுடன் கன மழை பெய்தது. இது இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இதனால் கடும் வெப்பம் தணிந்து, பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.