மாநில தலைவர் வெள்ளிவிழா ஆண்டையொட்டி பா.ம.க. சார்பில் கொடியேற்று விழா

மாநில தலைவர் வெள்ளிவிழா ஆண்டையொட்டி பா.ம.க. சார்பில் கொடியேற்று விழா நடந்தது.

Update: 2022-05-22 15:30 GMT

மாநில தலைவர் ஜி.கே.மணி, தலைவர் பணியில் 25 ஆண்டுகள் பணியாற்றியமைக்காக குமாரபாளையம் பா.ம.க. சார்பில் கொடியேற்றுவிழா நடைபெற்றது.

பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி, தலைவர் பணியில் 25 ஆண்டுகள் பணியாற்றியமைக்காக குமாரபாளையம் பா.ம.க. சார்பில் கொடியேற்றுவிழா மாவட்ட அமைப்பு செயலர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது.குமார பாளையம் பஸ் நிலைய வளாகத்தில் கொடியேற்றி வைக்கப்பட்டு பயணிகளுக்கு இனிப்புகள் மற்றும் 500 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிர்வாகிகள் ராமச்சந்திரன், சுப்ரமணி, சவுந்திரராஜன், சோமசுந்தரம், ரவிக்குமார், லோகநாதன், ஜெயவேல், பாபு, குமார், ஜெகநாதன், மகளிரணி நிர்வாகி சரோஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News