குமாரபாளையத்தில் பல்வேறு இடங்களில் அனுமன் ஜெயந்தி விழா

குமாரபாளையத்தில் பல்வேறு இடங்களில் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

Update: 2022-01-02 11:30 GMT

திருவள்ளுவர் நகர் பஞ்சமுக ஆஞ்சேநேயர் கோவில், உள்ளிட்ட பல பெருமாள் கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

குமாரபாளையத்தில் அனுமன் ஜெயந்தி விழா அனுமன் கோவில்கள் மற்றும் அனைத்து பெருமாள் கோவில்களில் கொண்டாடப்பட்டது.

திருவள்ளுவர் நகர் பஞ்சமுக ஆஞ்சேநேயர் கோவில், உள்ளிட்ட பல பெருமாள் கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்களின் பஜனை நிகழ்ச்சியும் நடைபெற்றன. சுவாமியை தரிசனம் செய்த பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

விட்டலபுரி பாண்டுரங்கர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்களின் பஜனை நிகழ்ச்சியும் நடைபெற்றன. சுவாமியை தரிசனம் செய்த பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

விட்டல்புரி பாண்டுரங்கர் கோவிலில் உள்ள ஆஞ்சேநேயர் கோவிலில் சுவாமி வெள்ளிக்கவச சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

அக்ரஹாரம் லட்சுமிநாராயண சுவாமி கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்களின் பஜனை நிகழ்ச்சியும் நடைபெற்றன. சுவாமியை தரிசனம் செய்த பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

அக்ரஹாரம் லட்சுமிநாராயண சுவாமி கோவிலில் ஆஞ்சேநேயர் கோவிலில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்


Tags:    

Similar News