அரசு பள்ளி மாணவிகள் இருவர் மாயம்
குமாரபாளையத்தில் அரசு பள்ளி மாணவிகள் இருவர் மாயமானார்கள்.;
அரசு பள்ளி மாணவிகள்
இருவர் மாயம்
குமாரபாளையத்தில் அரசு பள்ளி மாணவிகள் இருவர் மாயமானார்கள்.
குமாரபாளையம் குளத்துக்காடு பகுதியில் வசிப்பவர்கள் சுசி, 15, பிரியா, 14, இவர்கள் இருவரும் குமாரபாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகின்றனர். நேற்றுமுன்தினம் பகல் 11:30 மணியளவில் வெளியில் சென்று விட்டு வருவதாக கூறி சென்றவர்கள் வீடு திரும்பவில்லை. இது குறித்து பெற்றோர் குமாரபாளையம் போலீசில் புகார் செய்ய., காணாமல் போன மாணவிகள் இருவரை குமாரபாளையம் போலீசார் தேடி வருகின்றனர்.