குமாரபாளையம் அருகே அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு: பள்ளி மாணவர்கள் அட்டகாசம்
குமாரபாளையம் அருகே அரசு பேருந்து கண்ணாடியை பள்ளி மாணவர்கள் கல்லால் தாக்கி உடைத்தனர்.;
குமாரபாளையம் அருகே அரசு பஸ் கண்ணாடியை மாணவர்கள் கல்லால் தாக்கி உடைத்தனர்.
குமாரபாளையத்திலிருந்து ஈரோடு நோக்கி நேற்று மாலை 05:00 மணியளவில் கே 1 என்ற அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. பள்ளிபாளையம் சாலை எம்.ஜி.ஆர்.நகர் பஸ் நிறுத்தம் பகுதியில் பஸ்ஸில் இருந்து இறங்கிய மாணவர்கள் சிலர் பஸ்சின் பின்புற கண்ணாடியை கல்லால் தாக்கி உடைத்துள்ளனர். பஸ் ஓட்டுனர் சிவா, நடத்துனர் முருகன் பணியில் இருந்தனர். இதுபற்றி பயணிகளிடம் கேட்ட போது, நடத்துனர் மாணவர்களை உள்ளே போ, உள்ளே போ, என சொல்லிக்கொண்டு இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் பின்புற கண்ணாடியை கல்லால் தாக்கி உடைத்தனர், என கூறினர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.