பள்ளிபாளையம் அருகே அரசு பஸ் டூவீலர் மீது மோதிய விபத்தில் ஒருவர் காயம்

பள்ளிபாளையம் அருகே அரசு பஸ், டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டதில் ஒருவர் படுகாயமடைந்தார்.

Update: 2022-06-16 16:15 GMT

பள்ளிபாளையம் அருகே அரசு பஸ், டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டதில் ஒருவர் படுகாயமடைந்தார்.

சேலத்தில் இருந்து ஈரோடு நோக்கி அரசு பஸ் ஒன்று வெப்படை அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது சாலையின் குறுக்கே சென்ற டூவீலர் மீது மோதியதில் டூவீலர் ஓட்டுனர் பலத்த காயமடைந்து ஈரோடு ஜி.ஹெச்.ல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து வெப்படை போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News