குமாரபாளையம் ஆதரவற்றோர் மையத்தில் இலவச மருத்துவ சிகிச்சை முகாம்

குமாரபாளையம் அன்னை ஆதரவற்றோர் மையத்தில் இலவச மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது.

Update: 2022-05-27 01:31 GMT

குமாரபாளையம் எதிர்மேடு சத்யா நகர் அன்னை அதரவற்றோர் மையத்தில் இலவச பொது மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அன்னை ஆதரவற்றோர் மையத்தில் மருத்துவ சிகிச்சை முகாம் மைய நிர்வாகி ஹேமமாலினி தலைமையில் நடைபெற்றது. இதில் ரத்த அழுத்தம், கண் சிகிச்சை, இதயநோய், மூட்டுவலி, உள்ளிட்ட வகைகளுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது. அனைவருக்கும் மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது. இதில் எலந்தகுட்டை மருத்துவமனை டாக்டர் ரஹானா ரபியா மற்றும் மருத்துவ குழுவினர் சிகிச்சை செய்தனர்.

Tags:    

Similar News