குப்பாண்டபாளையம் ஊராட்சி சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்

குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையம் ஊராட்சி சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

Update: 2022-04-14 15:45 GMT

குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையம் ஊராட்சி சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம், ஈரோடு சேவ் சைட் பவுண்டேசன், குப்பாண்டபாளையம் ஊராட்சி மன்றம் சார்பில் பழைய ஊராட்சி மன்ற கட்டிடத்தில் ஊராட்சி தலைவர் கவிதா தலைமையில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

ஈரோடு அரசன் கண் மருத்துவமனை தலைமை டாக்டர் பன்னீர்செல்வம் தலைமையிலான குழுவினர் சிகிச்சை செய்தனர். இதில் தூரப்பார்வை, கிட்டப்பார்வை, கண்ணில் புரை, கண் வீக்கம், உள்ளிட்ட பல சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

குப்பாண்டபாளையம், சானார்பாளையம், பூலக்காடு, என்.ஜி.ஆர். நகர், குளத்துகாடு, டீச்சர்ஸ்காலனி உள்ளிட்ட பல கிராமங்களில் இருந்து 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் 19 பேர் ஐ.ஒ.எல். பொருத்தப்படும் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர். ஒன்றிய கவுன்சிலர் தனசேகரன், ஊராட்சி துணை தலைவர் புனிதா, நிர்வாகி வேலுமணி உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News