குமாரபாளையத்தில் நாளை 20 மையங்களில் இலவச தடுப்பூசி முகாம்

குமாரபாளையத்தில் நாளை 20 மையங்களில் இலவச தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.

Update: 2022-02-04 13:45 GMT

குமாரபாளையத்தில் நாளை 20 மையங்களில் இலவச தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.

இது குறித்து நகராட்சி ஆணையாளர் சசிகலா தமது அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- குமாரபாளையம் நகராட்சி பகுதிகளில் பிப். 5ல் சத்துணவு மையங்கள், பள்ளிகள் உள்ளிட்ட 20 இடங்களில் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது.

தமிழகத்தில் ஒமைக்ரான் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி போடாத நபர்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி, தடுப்பூசி போட்டுக்கொண்டு, 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்திய நகராட்சியாக உருவாக்கிட முழு ஒத்துழைப்பு தர கேட்டுகொள்கிறேன். இவ்வாறு அவர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News