குமாரபாளையம் இறகு பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

குமாரபாளையத்தில் நடைபெற்ற இறகுப்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சேர்மன் விஜய் கண்ணன் பரிசுகள் வழங்கினார்.;

Update: 2022-09-11 11:15 GMT

குமாரபாளையத்தில் நடைபெற்ற இறகுப்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சேர்மன் விஜய்கண்ணன் பரிசுகள் வழங்கினார்.

குமாரபாளையம் கோட்டைமேடு ஏ.டூ.பீ. பேட்மிட்டன் அமைப்பின் சார்பில் இறகுபந்து போட்டிகள் பல்வேறு வயது பிரிவின் கீழ் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் ரொக்கப்பரிசு மற்றும் கோப்பைகள், கேடயங்கள் வழங்கி பாராட்டினார். இதில் கவுன்சிலர்கள் தர்மராஜ், அழகேசன், ராஜ், வேல்முருகன், நிர்வாகிகள் செல்வராஜ், செந்தில்குமார், சரவணன், ஜூல்பிகர்அலி, உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News