அங்கன்வாடி மையத்திற்கு பேன், பாய்கள் வழங்கினார் தி.மு.க. கவுன்சிலர்

குமாரபாளையம் அங்கன்வாடி மையத்திற்கு தி.மு.க. கவுன்சிலர் பேன், பாய்கள் வழங்கினார்.

Update: 2022-05-19 13:30 GMT

குமாரபாளையம் சத்யாபுரி அங்கன்வாடி மையத்திற்கு தி.மு.க. கவுன்சிலர் ஜேம்ஸ் பேன், பாய்கள் வழங்கினார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சத்யாபுரி அங்கன்வாடி மையத்தில் மின்விசிறி, பாய்கள், குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் இல்லை என்பது தெரியவந்தது. இதனையறிந்த தி.மு.க. கவுன்சிலர் ஜேம்ஸ் அந்த அங்கன்வாடி மையத்திற்கு பேன், பாய்கள், குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்களை வாங்கி கொடுத்தார். இதற்கு அங்கன்வாடிபணியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் நன்றி தெரிவித்தனர்.

Tags:    

Similar News