குமாரபாளையத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலி

குமாரபாளையத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-09-23 12:00 GMT

குமாரபாளையம் காவல் நிலையம்.

குமாரபாளையம் அருகே சேலம் கோவை புறவழிச் சாலை கத்தேரி பிரிவு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சுமார் 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பலத்த காயத்துடன் சாலையோரம் கிடந்தார்.

இதனையடுத்து, அக்கம்பக்கத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமைனயில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது உடல்  ஈரோடு அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.

இவர் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்றும், இடுப்பில் வெள்ளிஅரைஞான் அணிந்து இருந்ததாகவும், யாசகராக இருக்க வாய்ப்பில்லை என்றும் போலீசார் கூறினர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News