போலி லாட்டரி விற்ற நபர் கைது
குமாரபாளையத்தில் போலி லாட்டரி விற்ற நபர் கைது செய்யப்பட்டார்;
போலி லாட்டரி விற்ற
நபர் கைது
குமாரபாளையத்தில் போலி லாட்டரி விற்ற நபர் கைது செய்யப்பட்டார்.
குமாரபாளையத்தில் போலி லாட்டரி விற்பதாக குமாரபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ. தங்கவடிவேல் தலைமையில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். ஜே.கே.கே. நடராஜா நகர் பகுதியில் போலி லாட்டரி விற்பதாக அறிந்து, நேரில் சென்றனர். அங்கு போலி லாட்டரி விற்றுக்கொண்டிருந்த பூபதி, 38, என்பவரை கைது செய்து, வெள்ளை தாள்களில் எண்கள் எழுதப்பட்ட 5 சீட்டுக்கள் பறிமுதல் செய்தனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.