குமாரபாளையம்: திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில், பல்வேறு கட்சிகளின் முன்னணி நிர்வாகிகள், திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

Update: 2021-06-12 13:54 GMT

குமாரபாளையம் திமுக அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், பல்வேறு கட்சியினர் திமுகவில் இணைந்தனர். 

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் திமுக நகர அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், பல்வேறு கட்சியினர் திமுகவில் இணைந்தனர்.

அதன்படி, பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை அமைப்பு செயலாளராக இருந்த அ.பெ.பழனிவேல், மாநில செயற்குழு உறுப்பினராக இருந்த 'பந்தல்' சி.பாலு மற்றும் வழக்கறிஞர் பா.யுவராஜ் உள்ளிட்டோர், அக்கட்சியில் இருந்து விலகி,  குமாரபாளையம் நகர திமுக பொறுப்பாளர் எம்.செல்வம் முன்னிலையில், திமுகவில் இணைந்தனர்.

அவர்கள் அனைவரும், திமுக உறுப்பினர் அட்டையை ஆன்லைனில் தரவிறக்கம் செய்து,  நகர கழக பொறுப்பாளரிடம் பெற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், திமுக நகர நிர்வாகிகள், இளைஞரணியினர், மாணவரணியினர், மகளிர் அணியினர் உள்பட ஏராளமானவர்கள் பக்கேற்றனர்.

Tags:    

Similar News