ஒரே மாலையை நகர செயலர், சேர்மனுக்கு அணிவித்து மாவட்ட செயலர் அசத்தல்

குமாரபாளையத்தில் தி.மு.க. மாவட்ட செயலருக்கு நடைபெற்ற வரவேற்பு விழாவில் ஒரே மாலையை நகர செயலர், சேர்மனுக்கு அணிவித்தார்.

Update: 2022-10-03 12:30 GMT

குமாரபாளையம் வருகை தந்த தி.மு.க. மேற்கு மாவட்ட செயலர் மதுரா செந்திலுக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.

குமாரபாளையத்தில் தி.மு.க. மாவட்ட செயலருக்கு நடைபெற்ற வரவேற்பு விழாவில் ஒரே மாலையை நகர செயலர், சேர்மனுக்கு அணிவித்தார்.

தி.மு.க. சார்பில் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலராக மதுரா செந்தில் தேர்வு செய்யப்பட்டார். தேர்வானபின் இவர் முதன்முதலாக குமாரபாளையம் வருகை தந்தார். இவரை தி.மு.க. நகர செயலர் செல்வம், நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் இருவரும் தங்கள் அணி சார்பில் நகர் முழுதும் அலங்கார தோரணங்கள், கொடிகள், பிளெக்ஸ் பேனர்கள் ஆகியவற்றை வைத்து பிரமிக்க வைத்தனர். பள்ளிபாளையம் பிரிவில் மேடை மீது ஏறிய மாவட்ட செயலருக்கு நகர செயலர் செல்வம், சேர்மன் விஜய்கண்ணன் இருவரும் பெரிய மாலை அணிவித்து, கிரீடம் சூட்டி, வீரவாள்கள் தனித்தனியாக பரிசாக வழங்கினர்.

தனக்கு சேர்மன் அணிவித்த ஒரு பெரிய மாலையை நகர செயலர் செல்வம், சேர்மன் விஜய்கண்ணன் இருவருக்கும் அணிவித்ததை கண்டு, இரு தரப்பு ஆதரவாளர்களும் கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர். அங்கிருந்து அனைவரும் ஊர்வலமாக சென்று அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. வழியில் உள்ள விநாயகர் கோவிலில் சேர்மன் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. தி.மு.க. கட்சி அலுவலகம், நகராட்சி அலுவலகத்திற்கு சென்ற மாவட்ட செயலருக்கு கவுன்சிலர்கள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் மாலைகள், சால்வைகள் அணிவித்தனர். 

Tags:    

Similar News