குமாரபாளையத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

குமாரபாளையத்தில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-01-21 15:45 GMT

குமாரபாளையத்தில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நகர துணை தலைவர் ஆறுமுகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் பள்ளிபாளையம் பிரிவு சாலையில் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நகர துணை தலைவர் ஆறுமுகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் பள்ளிபாளையம் பிரிவு சாலையில் நடைபெற்றது.

சேந்தமங்கலம் காவல்துறை விசாரணையில் தலித் மாற்றுத்திறனாளி பிரபாகரன் மரணத்திற்கு காரணமான, காவல் ஆய்வாளர், உதவி கண்காணிப்பாளர்களை வழக்கில் சேர்க்க வேண்டும். எஸ்.சி./எஸ்.டி.வன் கொடுமை, கொலை குற்ற பிரிவுகளில் வழக்குபதிவு செய்ய வேண்டும்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகள் குறித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

சங்க மாவட்ட அமைப்பாளர் முருகேசன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் துரைசாமி, சி.பி.எம். நகர செயலர் சக்திவேல், நகர குழு உறுப்பினர் சரவணன், நகர துணை செயலர் மோகன், நகர கிளை செயலர்கள் ஆனந்தகுமார், சண்முகம், அர்சுணன், முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News