பள்ளிபாளையத்தில் சி.பி.எம்., சி.பி.ஐ. சார்பில் ஆர்ப்பாட்டம்

பள்ளிபாளையத்தில் சி.பி.எம்., சி.பி.ஐ. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-05-29 02:10 GMT

பள்ளிபாளையத்தில் சி.பி.எம்., சி.பி.ஐ. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பள்ளிபாளையத்தில் சி.பி.எம்., சி.பி.ஐ., சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பெருமாள் தலைமையில் நடைபெற்றது.

பெட்ரோல், டீசல் வரிகளை கைவிட வேண்டும், விலை உயர்வை திரும்ப பெற வேண்டும், வேலை வாய்ப்பை பெருக்கிட வேண்டும், பல துறைகளில் காலிப் பணியிடங்கள் நிரப்ப வேண்டும், பருத்தி, நூல் விலையை கட்டுப்படுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பப் பட்டன. நிர்வாகிகள் செல்வராஜ், கதிரவன், ரவி, முத்துசாமி, வெங்கடேசன், மோகன், பெருமாள், பச்சியம்மாள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News