குமாரபாளையத்தில் 95 பேருக்கு கொரோனா சிகிச்சை

குமாரபாளையத்தில் 95 பேருக்கு கொரோனா சிகிச்சையளிக்கப்படுவதாக நகராட்சி சுகாதார அலுவலர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-01-25 15:45 GMT
குமாரபாளையம் அரசு மருத்துவமனை.

குமாரபாளையத்தில் 95 பேருக்கு கொரோனா சிகிச்சையளிக்கப்படுவதாக நகராட்சி சுகாதார அலுவலர் ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், குமாரபாளையத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் 129 பேர். சிகிச்சை முடிந்து வீட்டிற்கு சென்றவர்கள் 34 பேர். தற்போது சிகிச்சையில் உள்ளவர்கள் 95 பேர். ஒரே நாளில் 16 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News