குமாரபாளையத்தில் 44 பேருக்கு கொரோனா சிகிச்சை: சுகாதாரத்துறை
குமாரபாளையத்தில் 44 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.;
பைல் படம்.
குமாரபாளையத்தில் 44 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து நகராட்சி சுகாதார அலுவலர் ராமமூர்த்தி கூறுகையில், குமாரபாளையத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் 45 பேரில், ஒருவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
தற்போது 44 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 3 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். கொரோனா பாதிப்புக்குள்ளானவர்கள் அரசு மருத்துவமனையில் 12, 29 வார்டுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அவர் தெரிவித்தார்.