குமாரபாளையத்தில் 41 பேருக்கு கொரோனா சிகிச்சை
குமாரபாளையத்தில் 41 பேருக்கு கொரோனா சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை தெரவித்துள்ளது.;
குமாரபாளையத்தில் 41 பேருக்கு கொரோனா சிகிச்சையளிக்கப்படுகிறது.
இதுகுறித்து நகராட்சி சுகாதார அலுவலர் ராமமூர்த்தி கூறுகையில், குமாரபாளையத்தில் கொரோனா தொற்று இன்று 42 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.
தற்போது 41 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்புக்குள்ளானவர்கள் 2,6,7,12,15,19,20,26,27 ஆகிய நகராட்சி வார்டுகளைச் சேர்ந்தவர் என அவர் கூறினார்.