குமாரபாளையத்தில் 13 பேருக்கு கொரோனா சிகிச்சை

குமாரபாளையத்தில் 13 பேர்களுக்கு கொரோனா சிகிச்சையளிக்கப்படுவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2021-08-20 16:45 GMT

பைல் படம் 

குமாரபாளையத்தில் 13 பேர்களுக்கு கொரோனா சிகிச்சையளிக்கப்படுகிறது. இதுகுறித்தது ஆணையர் ஸ்டான்லிபாபு கூறியதாவது: இன்றைக்கு  பாதிப்பு ஒருவர் கூட இல்லை. மொத்த பாதிப்பு எண்ணிக்கை -661 . நோய் குணமாகி வீட்டிற்கு சென்றவர்கள்624 . இறப்பு -24,கொரோனா சிகிச்சையில் இருப்பவர்கள் 13 பேர் மட்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கொரோனா நோய் பாதிப்பு நாள் ஒன்றுக்கு 2, 3 என்ற அளவில்தான் இருந்து வந்தது. நாமக்கல் மாவட்ட அளவில் நோய் தொற்று பரவி வரும் நிலையில் குமாரபாளையத்திலும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. பொதுமக்கள் முககவசங்கள், கிருமிநாசினி மருந்து பயன்படுத்தி நோய் வராமல் இருக்க முயற்சிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.


Tags:    

Similar News