குமாரபாளையம் சத்யாபுரியில் மூன்றாம் நாளாக நிவாரண தொகை வழங்கல்

நாமக்கல் மாவட்டம் சத்யாபுரி ரேசன் கடையில் 3 வதுநாளாக தொடர்ந்து கொரோனா நிவாரணத் தொகை ரூ 2000ம் வழங்கப்பட்டு வருகிறது.

Update: 2021-05-17 05:30 GMT

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் கடந்த 3 -தினங்களாக தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தபடி கொரானா சிறப்பு நிவாரண நிதியாக 4 ஆயிரம் ரூபாயில் முன் தணை தொகையாக 2000 ரூபாய்  ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது

இதனால் ஏராளமான மக்கள் ஒரே நேரத்தில் நிதி வாங்க திரண்டுருந்த நிலையில் அடுத்தடுத்த நாட்களில் நிலைமை சீரானது மேலும் டோக்கன் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் மட்டும் கடையினுள் அனுமதிக்கப்பட்டு நிவாரண உதவித் தொகையான 2000 வழங்கப்பட்டு வருகிறது

அதன்படி குமாரபாளையம் சத்யாபுரி ரேஷன் கடை எண் 1 ல் 3வது நாளாக இன்றும் கொரோனா நிதி ₹இரண்டாயிரம் வழங்கப்பட்டு வருகிறது!

Tags:    

Similar News