குமாரபாளையம் அருகே காங்கிரஸ் கட்சி பாதயாத்திரை நிறைவு விழா

குமாரபாளையம் அருகே காங்கிரஸ் கட்சி பாதயாத்திரை நிறைவு விழா நடைபெற்றது.

Update: 2022-08-15 02:45 GMT

குமாரபாளையம் அருகே காங்கிரஸ் கட்சி பாதயாத்திரை நிறைவு விழாவில் ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வே.ரா. பங்கேற்று பேசினார்.

75வது சுதந்திரதினவிழாவையொட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் பாதயாத்திரை நிகழ்ச்சி மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் ஒரு கட்டமாக குமாரபாளையம் அருகே கல்லங்காட்டுவலசு பகுதியில் பாதயாத்திரை நிறைவு விழா மாவட்ட துணை தலைவர் அல்லிமுத்து தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வே.ரா. பங்கேற்று பேசினார். இவர் பேசியதாவது:

பா.ஜ.க. ஆட்சியில் கடுமையான விலைவாசி உயர்வு மக்களை வாட்டி வதைத்து வருகிறது. ஜி.எஸ்.டி. வரி பொதுமக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தி வருகிறது. பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்து வருவது நாட்டிற்கு நல்லதல்ல. 5ஜி அலைக்கற்றை ஊழல் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மாவட்ட தலைவர் செல்வகுமார், வடக்கு வட்டார தலைவர் ரவிச்சந்திரன், தெற்கு வட்டார தலைவர் சுரேஷ்கண்ணா, பள்ளிபாளையம் நகர தலைவர் ராஜேந்திரன் மற்றும் நகர, வட்டார, மாவட்ட கழக நிர்வாகிகள், மகளிரணியினர் பெருமளவில் பங்கேற்றனர்.

Tags:    

Similar News