குமாரபாளையத்தில் தற்காலிக மார்க்கெட், மின் இணைப்பு பணிகள் குறித்து சேர்மன் ஆய்வு

குமாரபாளையத்தில் தற்காலிக மார்க்கெட் கடைகள் அமைத்தல், மின் இணைப்பு பணிகள் குறித்து சேர்மன் ஆய்வு செய்தார்.

Update: 2022-05-22 13:15 GMT

குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டில் மார்க்கெட் அமைக்கும் பணிகளை சேர்மன் பார்வையிட்டார்.  

குமாரபாளையத்தில் தற்காலிக மார்க்கெட் கடைகள் அமைத்தல், மின் இணைப்பு பணிகள் குறித்து சேர்மன் ஆய்வு செய்தார்.

தற்போதுள்ள தினசரி காய்கறி மார்க்கெட் கட்டிடம் சேதமானதால், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2 கோடியே 28 லட்சம் மதிப்பில் தினசரி காய்கறி மார்க்கெட் கட்டிடம் புதியதாக கட்டப்பட உள்ளது. கட்டுமான பணிகள் முடியும் வரை தற்காலிகமாக மார்க்கெட் பஸ் ஸ்டாண்டில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடைகள் அமைக்கும் பணி துவங்கியது. இந்த பணிகளையும், கடைகளுக்கு மின் இணைப்பு கொடுக்கும் பணிகளையும் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் நேரில் பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார். கமிஷனர் விஜயகுமார், பொறியாளர் ராஜேந்திரன், உதவி பொறியாளர் செந்தில்குமார்,உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News