காவிரியில் மீண்டும் வெள்ளம்: தயார் நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள்
Flood News Today - குமாரபாளையம் காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளம் வந்து கொண்டு இருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.;
பைல் படம்.
Flood News Today -ஆடி மாதம் பிறந்தது முதல் காவிரியில் வெள்ளம் வந்து கொண்டே உள்ளது. இதனால் காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் மிகவும் அதிருப்தியடைந்துள்ளனர். வேலைக்கும் செல்ல முடியாமல், வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. சாமான்களை எடுத்து வருவது, மீண்டும் கொண்டு செல்வது என நான்கு முறை இவர்கள் செய்து விட்டனர். இருப்பினும் வருவாய்த்துறையினர் காவிரி கரையோர மக்களை பாதுகாப்பு மையத்தில் வந்து தங்க கோரிக்கை விடுத்துள்ளனர். உணவு, மருத்துவம் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2