சாலையை கடக்கும் போது கார் மோதிய விபத்தில் 8 வயது சிறுவன் படுகாயம்..!

குமாரபாளையத்தில் சாலையை நடந்து கடக்கும் போது கார் மோதிய விபத்தில் 8 வயது சிறுவன் படுகாயமடைந்தான்.

Update: 2024-09-21 12:00 GMT

மாதிரி படம் 

சாலையை நடந்து கடக்கும் போது கார் மோதிய விபத்தில் 8 வயது சிறுவன் படுகாயம்

குமாரபாளையத்தில் சாலையை நடந்து கடக்கும் போது கார் மோதிய விபத்தில் 8 வயது சிறுவன் படுகாயமடைந்தான்.

திருப்பூர், சந்திராபுரம் பகுதியில் வசிப்பவர் சவுமியாதேவி, 40. இவரும், இவரது மகள்கள், 8 வயது மகன் தேவன் ஆகியோர் குமாரபாளையம் காவேரி நகர் பகுதியில் உள்ள தன் தாயார் வீட்டுக்கு வந்தனர். செப். 15 காலை 11:45 மணியளவில், காவேரி நகர், பத்ரகாளியம்மன் கோவில் அருகே, காவிரி ஆற்றில் குளித்து விட்டு தன் குழந்தைகளுடன் இடைப்பாடி சாலையை நடந்து கடந்தார்.

அப்போது அவ்வழியே வேகமாக வந்த, மாருதி ஆம்னி கார் , சிறுவன் தேவன் மீது மோதியதில், சிறுவன் பலத்த காயமடைந்தான். இவனை திருப்பூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். இது குறித்து சவுமியாதேவி குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்தார். இதன்படி விபத்துக்கு காரணமான கார் ஓட்டுனர் , குமாரபாளையம் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி விடுதி வார்டன் பிரதாப்பிரவீன், 19, என்பவரை குமாரபாளையம் போலீசார் கைது செய்தனர். 

Tags:    

Similar News