குமாரபாளையத்தில் கார் ஓட்டுனர் தூக்கு மாட்டி தற்கொலை

குமாரபாளையத்தில், கார் ஓட்டுனர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-10-21 14:00 GMT

குமாரபாளையம் காவேரி நகரில் வசித்து வந்தவர் ரத்தினவேல், 55, கார் ஓட்டுனர். இவரது மனைவி மகேஸ்வரி, 48. நேற்று மாலை மகேஸ்வரி,  தனது உறவினர் வீட்டுக்கு போயிருந்ததாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில், வீட்டின் அருகில் குடியிருக்கும் சிலர், ரத்தினவேல் வீட்டிற்குள் தூக்கு மாட்டி தொங்குவது கண்டு, மகேஸ்வரிக்கு தகவல் தந்துள்ளனர்.

உடனடியாக வீட்டிற்கு வந்து, அக்கம் பக்க உள்ளவர்களின் உதவியுடன், உடலை கீழே இறக்கி, குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு ரத்தினவேலை பரிசோதித்த டாக்டர்,  அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என்று கூறியுள்ளார். இதுகுறித்து,  குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடன் பிரச்சனையா? குடும்ப தகராறில் மன உளைச்சலா? என்பது பற்றி விசாரணை செய்து வருகின்றனர். 

Tags:    

Similar News