குமாரபாளையத்தில் இருதரப்பினர் மோதல்: இருவர் படுகாயம்; 4 பேர் தலைமறைவு

குமாரபாளையத்தில் நிலத்தகராறு சம்பந்தமாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் படுகாயமடைந்தனர்.

Update: 2021-09-13 16:00 GMT

குமாரபாளையம் காவல் நிலையம்.

குமாரபாளையம் அருகே அய்யம்பாளையம் பகுதியில் வசிக்கும் கனகராஜ்,46, பாலமுருகன், 47, இருவரும் சித்தப்பா, பெரியப்பா மகன்கள். விவசாயிகளான இவர்கள் இருவருக்கும் 20 வருடமாக நிலப்பிரச்சனை இருந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று பாலமுருகன், இருவருக்கும் பொதுவான விவசாய கிணற்றில் தண்ணீர் எடுத்து நிலத்திற்கு பாய்ச்சி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கனகராஜ் மற்றும் அவரது பெற்றோர்களான பழனியப்பன், லோகநாயகி ஆகிய மூவரும் வந்து, கனகராஜிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.  இதில் ஆத்திரமடைந்த அப்பா, மகன் இருவரும் சேர்ந்து பாலமுருகனை கட்டை, கடப்பாரை மற்றும் கைகளால் தாக்கினர்.

இது பற்றி தகவலறிந்த பாலமுருகனின் பெற்றோர் செங்கோடன், காளியம்மாள் இருவரும் வந்து வாக்குவாதம் செய்ததுடன் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் பாலமுருகன், கனகராஜ் இருவரும் காயமடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த குமாரபாளையம் போலீசார் சம்பவ இடம் சென்று இருவரையும் மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். கனகராஜ் மற்றும் பாலமுருகன் பெற்றோர்கள் நான்கு பேர்களும் தலைமறைவாகினர்.

Tags:    

Similar News