அகவிலைப்படியை உயர்த்த வேண்டி மின்வாரிய தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பவானியில் அகவிலைப்படி உயர்த்தி வழங்க கோரி மின்வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
பவானி,ஊராட்சி கோட்டை செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு மின்வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பவானியில் அகவிலைப்படி உயர்த்தி வழங்க கோரி மின்வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு மின்சார வாரியம் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பாக தமிழக அரசை கண்டித்து பவானி, ஊராட்சி கோட்டை செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு தொழிற்சங்க ,மாநில இணை செயலர் மணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக அரசு ஜூலை 1-முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படியை உடனே வழங்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் பங்கேற்றனர்.