குமாரபாளையம் அருகே அரசு உயர்நிலைப்பள்ளியில் பாரதியார் பிறந்தநாள் விழா

குமாரபாளையம் அருகே வேமன்காட்டுவலசு அரசு உயர்நிலைப்பள்ளியில் பாரதியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2021-12-12 05:58 GMT

குமாரபாளையம் அருகே வேமன்காட்டுவலசு அரசு உயர்நிலைப்பள்ளியில் பாரதியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

நாமக்கால் மாவட்டம், குமாரபாளையம் அருகே வேமன்காட்டுவலசு அரசு உயர்நிலைப்பள்ளியில் விடியல் ஆரம்பம் சார்பில் அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் பாரதியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. தலைமையசிரியை விழாவை துவக்கி வைத்தார்.

மகாகவி பாரதியார்  திருவுருவப்  படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது. பாரதியார் வேடமணிந்து வந்த மாணவ, மாணவியர்கள் பாரதியாரின் கவிதைகளை வாசித்தனர்.

மேலும் பேச்சு, கட்டுரை, வினாடிவினா, கவிதை  போட்டிகள்  நடத்தப்பட்டு  வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு  பரிசாக டிபன் பாக்ஸ் மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டன. மாணவ மாணவிகளுக்கு கடலைமிட்டாய், முககவசம், கிருமி நாசினியும் வழங்கப்பட்டது.

விழாவில் பள்ளி ஆசிரியர்கள் குமார், முத்து மற்றும் மாஸ்டர் சதீஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News