ஐயப்ப சுவாமி திருவீதி உலா மற்றும் திருவிளக்கு வழிபாடு
குமாரபாளையத்தில் ஐயப்ப சுவாமி திருவீதி உலா மற்றும் திருவிளக்கு வழிபாடு, அன்னதானம் நடந்தது;
படவிளக்கம் :
குமாரபாளையம் அகில பரத ஐயப்ப சேவா சங்கம், ஸ்ரீ தர்ம சாஸ்தா சபரி யாத்திரை குழுவின் சார்பில், 23வது ஆண்டு விழா, திருவிளக்கு வழிபாடு நடந்தது
ஐயப்ப சுவாமி திருவீதி உலா மற்றும் திருவிளக்கு வழிபாடு - குமாரபாளையத்தில் ஐயப்ப சுவாமி திருவீதி உலா மற்றும் திருவிளக்கு வழிபாடு, அன்னதானம் நடந்தது.
குமாரபாளையம் அகில பரத ஐயப்ப சேவா சங்கம், ஸ்ரீ தர்ம சாஸ்தா சபரி யாத்திரை குழுவின் சார்பில், 23வது ஆண்டு விழா, திருவிளக்கு வழிபாடு நடந்தது. ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடந்தது. வேணு குருசாமி தலைமை வகித்தார். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஐயப்ப சுவாமி திருவீதி உலா முக்கிய வீதிகளின் வழியாக நடந்தது. பக்தர்கள் வழிநெடுக நின்று சுவாமியை வழிபட்டனர். இதையடுத்து சுவாமிக்கு 108 திருவிளக்கு வழிபாடு மற்றும் தீபாராதனை, பக்தி பஜனை பாடல்கள் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.