தவெக சார்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவருக்கு கல்வி உதவித்தொகை வழங்கல்

தமிழக வெற்றிக்கழகம் சார்பில் அதிக மதிப்பெண் பெற்ற குமாரபாளையம் மாணவருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

Update: 2024-07-07 13:00 GMT

தவெக சார்பில் அதிக மதிப்பெண் பெற்ற குமாரபாளையம் மாணவர் நேதாஜிக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

த.வெ.க. சார்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற குமாரபாளையம் மாணவருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

குமாரபாளையம் சமூக ஆர்வலர் சரவணன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலமில்லாமல் இறந்தார். இவருக்கு 2 ஆண் குழந்தைகள். இதில் 2வது மகன் நேதாஜி, 10ம வகுப்பு பொதுத்தேர்வில் 459 மதிப்பெண்கள் பெற்றார். இதனை பாராட்டும் வகையில், நடிகர் விஜய் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் சார்பில், அவரது வீட்டிற்கு நேரில் சென்று, மாணவனின் தாயார் சுஜாதாவிடம் 3 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

இதில் உறுப்பினர் சேர்க்கை அணி மாநில செயலாளர் விஜயலட்சுமி, சமூக ஆர்வலர் சித்ரா, நகர தலைவர் சக்திவேல், நிர்வாகிகள் வேல்முருகன், மகாபிரபு, மோகன்ராஜ், கார்த்திக் உள்பட பலர் பங்கேற்றனர்.

Similar News