முன்விரோதம் காரணமாக விவசாயி மீது தாக்குதல்: இளைஞர்களுக்கு வலைவீச்சு

குமாரபாளையம் அருகே டூவீலரில் வந்த விவசாயியை இரு இளைஞர்கள் கல்லால் தாக்கிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-01-17 10:15 GMT

குமாரபாளையம் காவல் நிலையம்.

குமாரபாளையம் அருகே ஆலாங்காட்டுவலசு பகுதியில் வசிப்பவர் ராமசாமி, 87. விவசாயி. இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இருவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. இவர் தனியாக வசித்து வருகிறார்.

ஜன. 16ம் தேதி மாலை 03:30 மணியளவில் டி.வி.எஸ். வாகனத்தில் குமாரபாளையம் செல்லும் வழியில் வந்து கொண்டு இருந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த பாஸ்கர்ராஜா, 16, மற்றொரு இளைஞர் சேர்ந்து முன் விரோதம் காரணமாக, ராமசாமியை கல்லால் தாக்கிவிட்டு இருவரும் அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.

பின்னர் தனது மகனுக்கு அவர் தகவல் கொடுத்தார். இதனையடுத்து அவரை குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News