குமாரபாளையத்தில் ஓவியர் சங்க ஆலோசனை கூட்டம்

குமாரபாளையத்தில் ஓவியர் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2021-11-24 08:30 GMT

குமாரபாளையத்தில் ஓவியர் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

குமாரபாளையத்தில், ஓவியர் சங்கம் சார்பில், சங்க தலைவர் கதிரவன்  தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், டிச. 11ல்  பாரதி பிறந்த நாள் கொண்டாடுவது, இந்த நாளில்  திரைப்பட நடிகரும், ஓவியருமான சாப்ளின் பாலு, நடிகர் பெஞ்சமின் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்குதல்,  ஓவியர் சங்க பெயர் பலகை திறந்து வைத்தல், மரக்கன்று நடுதல், சங்க கொடிக்கம்பம் நடுதல், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குதல், கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்குதல், தமிழ்நாடு தேர்தலில் நகர் புறங்களில் சுவர் விளம்பரம் எழுத அனுமதி வழங்க வேண்டி அரசுக்கு கோரிக்கை விடுத்தல், ஓவியர்களுக்கு இலவச வீட்டுமனை வேண்டி அரசுக்கு கோரிக்கை விடுத்தல்  என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநில அமைப்பு செயலர் பழனிச்சாமி, மாவட்ட தலைவர் சந்திரசேகரன், மாவட்ட செயலர் செந்தில்குமார் பங்கேற்று, உறுப்பினர் அட்டை பெற விண்ணப்பங்கள் வழங்கினார். இது சம்பந்தமாக நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சுவர் விளம்பரங்கள் எழுதப்பட்டு வருகிறது. நிர்வாகிகள் சிங்காரவேல், பாஸ்கரன், சிவகுமார், சீனிவாசன், பிரகாஷ், குணசேகரன், சுசிகுமார், ரவிச்சந்திரன், மாணிக்கம் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News