வெப்படை: பெண்ணிடம் அத்துமீறியவர் போக்சோ சட்டத்தில் கைது
வெப்படை அருகே, பெண்ணிடம் அத்துமீறியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.;

மோகன்ராஜ்
நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் பகுதியில் வசிப்பவர் மோகன்ராஜ்,27. இவர் வெப்படை அருகே உள்ள ஸ்பின்னிங் மில்லில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார்.
இதே மில்லில் பணியாற்றி வரும் வேறு மாநிலத்தை சேர்ந்த, 17 வயது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண், வெப்படை போலீசில் புகார் செய்தார். இது குறித்து, எஸ்.ஐ. வெற்றிவேல் விசாரணை செய்து, மோகன்ராஜை போக்சோ வழக்கில் கைது செய்தார்.