அரசு மது பானத்தை வீட்டில் வைத்து விற்ற நபர் கைது
குமாரபாளையத்தில் அரசு மது பானத்தை வீட்டில் வைத்து விற்ற நபர் கைது செய்யப்பட்டார்.;
அரசு மது பானத்தை வீட்டில்
வைத்து விற்ற நபர் கைது
குமாரபாளையத்தில் அரசு மது பானத்தை வீட்டில்
வைத்து விற்ற நபர் கைது செய்யப்பட்டார்.
குமாரபாளையம் அருகே கல்லங்காட்டுவலசு, வீ.மேட்டூர் பகுதியில் வசிப்பவர் செல்வராஜ், 52. விவசாயி. இவர் வீட்டில் அரசு மது பானங்களை வைத்து விற்பனை செய்வதாக தகவல் கிடைத்து, இன்ஸ்பெக்டர் தவமணி உள்ளிட்ட போலீசார் நேரில் சென்று பார்த்ததில், வீட்டில் அரசு மது பானங்களை வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இவரிடமிருந்து 7 மது பாட்டில்கள் மற்றும் ரொக்கம் 200 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு, இது குறித்து வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.