குமாரபாளையத்தில் காளியம்மன் திருவிழாவையொட்டி அம்மன் திருவீதியுலா
குமாரபாளையத்தில் காளியம்மன் திருவிழாவையொட்டி அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.;
குமாரபாளையத்தில் காளியம்மன் திருவிழாவையொட்டி காளியம்மன் திருவீதி உலா நடைபெற்றது.
குமாரபாளையம் காளியம்மன் திருவிழா பூச்சாட்டுதல், மகா குண்டம் பூ மிதித்தல், தேர்த்திருவிழா, அம்மன் திருகல்யாணம், வண்டி வேண்டிக்கி, வாண வேடிக்கை, ஊஞ்சல் விழா ஆகியவை நடைபெற்றது.
தினமும் ஒவ்வொரு சமுதாயத்தினர், ஓரே தொழில் செய்யும் தொழிற்சங்கத்தினர், என பலதரப்பட்ட மக்கள் தினம் ஒரு நாள் சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் செய்து அம்மண வழிபட்டு வருகின்றனர்.
நேற்று போயர் சமுதாய மக்கள் சார்பில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட அலங்கார வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. முக்கிய வீதிகளின் வழியாக சென்ற திருவீதி உலா காளியம்மன் கோவிலில் நிறைவு பெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.