குமாரபாளையத்தில் பட்டாசு வெடித்து அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்

நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று குமாரபாளையத்தில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர்.

Update: 2022-07-20 12:15 GMT

குமாரபாளையத்தில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

சென்னை அ.தி.மு.க. தலைமை அலுவலகம் உரிமை கேட்டு நடைபெற்ற வழக்கில், எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.


இதனை கொண்டாடும் வகையில் குமாரபாளையம் அ.தி.மு.க.வினர் பள்ளிபாளையம் பிரிவு சாலையில் நகர செயலாளர் பாலசுப்ரமணி தலைமையில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள். நிர்வாகிகள் அர்ச்சுனன், ரவி, சிங்காரவேலன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


Tags:    

Similar News