பூட்டி கிடந்த படிப்பகம் திறக்க குமாரபாளையம் நகராட்சி சேர்மன் நடவடிக்கை

குமாரபாளையத்தில் பூட்டிக்கிடந்த படிப்பகம் திறக்க நகராட்சி சேர்மன் விஜய் கண்ணன் நடவடிக்கை எடுத்தார்

Update: 2022-06-27 13:30 GMT

குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் அண்ணா சமுதாய படிப்பகம் திறக்க சேர்மன் விஜய்கண்ணன் நடவடிக்கை மேற்கொண்டார்.

குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் அண்ணா சமுதாய படிப்பகம் ஒரு வாரமாக பூட்டி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது பற்றி தகவலறிந்த நாமக்கல் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன், நேற்று நூலகத்தை திறந்து வைத்து, தினமும் திறந்து வைக்கவும், பொதுமக்கள் பயன்பெறவும் நடவடிக்கை மேற்கொண்டார். இதனால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதில் கவுன்சிலர்கள் கிருஷ்ணவேணி, சியாமளா, கனகலட்சுமி, வேல்முருகன், ஜேம்ஸ், அழகேசன், நிர்வாகிகள் செல்வராஜ், செந்தில், ஐயப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News