போலி லாட்டரி சீட்டு விற்ற நபர் கைது

குமாரபாளையத்தில் போலி லாட்டரி சீட்டு விற்ற நபர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2025-03-31 12:22 GMT

போலி லாட்டரி சீட்டு விற்ற

நபர் கைது


குமாரபாளையத்தில் போலி லாட்டரி சீட்டு விற்ற

நபர் கைது செய்யப்பட்டார்.

குமாரபாளையத்தில் போலி லாட்டரி விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ. தங்கவடிவேல், எஸ்.ஐ. நடராஜன் ஆகியோர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். பெரியார் நகர் பகுதியில் போலி லாட்டரி விற்பது தெரியவந்தது. நேற்று மாலை 01:00 மணியளவில் நேரில் சென்ற போலீசார், வெள்ளை தாள்களில் நம்பர்கள் எழுதி, போலி லாட்டரி விற்ற மாதேஷ், 42, என்ற நபரை கைது செய்து, அவரிடமிருந்து, நம்பர்கள் எழுதப்பட்ட வெள்ளை தாள்கள் 5 பறிமுதல் செய்தனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Similar News