கூலி தொழிலாளியின் இடது காதை கடித்து துண்டாக்கிய தொழிற்சங்க மாநில செயலர்

குமாரபாளையத்தில் கூலி தொழிலாளியின் இடது காதை தொழிற்சங்க மாநில செயலர் கடித்து துண்டாக்கினார்.

Update: 2022-08-29 09:45 GMT

குமாரபாளையம் காவல் நிலையம்.

குமாரபாளையம் விட்டலபுரி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், 46. கூலித் தொழிலாளி. இவர் நேற்றுமுன்தினம் காலை 10:30 மணியளவில் வர சந்தை பின்புற சாலையில் தனது டி.வி.எஸ். எக்ஸல் வாகனத்தை ஒட்டியவாறு வந்து கொண்டிருக்க, ஏ.ஐ.சி.சி.டி.யூ. மாநில செயலர் சுப்பிரமணி வேகமாக வந்து இவரது வாகனத்தில் மோத மணிகண்டன் நிலைதடுமாறினார்.

இது குறித்து சுப்பிரமணிஇடம் பார்த்து போக கூடாதா? என்று கேட்க, சுப்ரமணி தகாத வார்த்தை பேசியவாறு அருகில் வந்து கழுத்தை கடிக்க முயற்சிக்க, மணிகண்டன் சுதாரித்து எழுந்து நின்றார். அப்போதும் விடாமல் மணிகண்டனின் இடது காதை கடித்து துப்பி அங்கிருந்து தப்பியோடினார்.

இதனால் மணிகண்டனை துண்டான காதுடன் அக்கம் பக்கம் உள்ளவர்கள் சேலம் ஜி.ஹெச்.க்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து தப்பியோடிய சுப்ரமணியை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News