குமாரபாளையத்தில் 33 வார்டுகளுக்கு 98 தி.மு.க.வினர் விருப்பமனு

குமாரபாளையத்தில் 33 வார்டுகளுக்கு தி.மு.க.வினர் 98 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர்.

Update: 2021-11-22 15:15 GMT

குமாரபாளையத்தில் வார்டு உறுப்பினர் பதவிக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அளித்த தி.மு.க.வினர்.

நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலர் மூர்த்தி அறிவுறுத்தல்படி குமாரபாளையம் நகர்மன்றத்திற்கு வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விரும்புகிறவர்களுக்கு நகர பொறுப்பாளர் செல்வம் தலைமையில் மாவட்ட பொருளாளர் குமார் பங்கேற்று, விருப்பமனு வழங்கினார்.

கழகத்தினர் 10 ரூபாய் கொடுத்து மனுவினை பெற்றுக்கொள்ளலாம். நகரமன்ற உறுப்பினர் பதவிக்கான சுயவிபரங்களை நிரப்பிய பின் மனுவோடு 5 ஆயிரம் ரூபாய், பெண்கள் வார்டுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாயும் நகர தி.மு.க. அலுவலகத்தில் நவ.22ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இரண்டு நாட்களில் இதுவரை 180 விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.

அதனை பூர்த்தி செய்து திருநங்கை சபிதா, முன்னாள் கவுன்சிலர்கள், முன்னாள் அ.தி.மு.க. நகர்மன்ற துணை தலைவர் ராஜேந்திரன், வார்டு செயலர்கள் உள்பட 98 நபர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் அதற்குரிய பணம் ஆகியவைகள் வழங்கினர்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட பொருளர் குமார் பெற்றுகொண்டார். நகர பொறுப்பாளர் செல்வம், முன்னாள் நகர செயலர் வெங்கடேசன், நிர்வாகிகள் அன்பரசு, அன்பழகன், ஒ.ஆர்.எஸ். எனப்படும் செல்வராஜ், விஜய்கண்ணன், ராஜ்குமார், மீனாட்சிசுந்தரம், ரவி, உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News