குமாரபாளையத்தில் கொரோனா சிகிச்சையில் 9 பேர்

குமாரபாளையத்தில் 9 பேர் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Update: 2021-08-29 13:00 GMT
பைல் படம்

குமாரபாளையத்தில் 9 பேர்களுக்கு கொரோனா சிகிச்சையளிக்கப்படுகிறது. இது பற்றி ஆணையர் ஸ்டான்லிபாபு கூறியதாவது:

இன்றைய  பாதிப்பு ஒருவர் கூட இல்லை மொத்த பாதிப்பு எண்ணிக்கை - 669. நோய் குணமாகி வீட்டிற்கு சென்றவர்கள் 636. இறப்பு -24. கொரோனா சிகிச்சையில் இருப்பவர்கள் 9 பேர் மட்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கொரோனா நோய் பாதிப்பு நாள் ஒன்றுக்கு 2, 3 என்ற அளவில்தான் இருந்து வந்தது. நாமக்கல் மாவட்ட அளவில் நோய் தொற்று பரவி வரும் நிலையில் குமாரபாளையத்திலும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

பொதுமக்கள் முக கவசங்கள், கிருமிநாசினி மருந்து பயன்படுத்தி நோய் வராமல் இருக்க முயற்சிக்க வேண்டும். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நகராட்சி பணியாளர்கள் மைக் மூலம் கொரோனா தடுப்பு பிரச்சாரம் செய்தனர்.

வியாபாரிகள், வாடிக்கையாளர்கள் முக கவசம் அணிய வேண்டும், கிருமிநாசினி மருந்து ஒவ்வொரு கடையிலும் வைத்திருக்க வேண்டும், சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கருத்துக்கள் வலியுறுத்தி கூறப்பட்டன.

Tags:    

Similar News