ஏழை மாணவர்களுக்கு 50,000 ரூபாய் வழங்கும் முதலமைச்சர் திட்டம்
முதல்வரின் தொழிற்கல்வி நிதி நாமக்கலில் மாணவர்களுக்கு 50,000 ரூபாய் உதவி!;
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா அவர்கள் அறிவித்துள்ளபடி, முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தொழிற்கல்வி பயிலும் ஏழை மாணவர்களுக்கு வழங்கப்படும் உயர்கல்வி உதவித்தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன, இத்திட்டத்தின் கீழ் தமிழக அரசானது மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு அவர்களின் கல்விக் காலத்தில் ஒருமுறை மட்டும் ரூ.50,000 வழங்குகிறது, இந்த உதவித்தொகையைப் பெற விரும்பும் மாணவர்கள் அரசு நடத்தும் சிங்கிள் விண்டோ முறையில் தொழிற்கல்வியில் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்க்கை பெற்றவர்கள் இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற தகுதியற்றவர்கள், மேலும் விண்ணப்பதாரர்கள் தமிழகத்தில் இருப்பிடச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும், முதல் தலைமுறை பட்டதாரியாக இருந்து அதற்கான கல்விக் கட்டணச் சலுகை பெற்றிருக்கக் கூடாது, போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை பெற்றிருக்கக் கூடாது, மற்றும் 7.5 சிறப்பு ஒதுக்கீட்டின் வழியாக சேர்க்கை பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை உள்ளிட்ட வேறு பயன்கள் பெற்றிருக்கக் கூடாது, மேற்கூறிய அனைத்து தகுதிகளையும் பூர்த்தி செய்யும் தொழிற்கல்வி பயிலும் மாணவ, மாணவியர் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சமூக பாதுகாப்புத் திட்ட (ஜி பிரிவு) பிரிவில் முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து இந்த முதல்வரின் உயர்கல்வி நிதியுதவித் திட்டத்தின் பலன்களைப் பெறலாம்.